நட்பு
முன்னுரை
நான் இந்த பகுதியை என் நண்பனுகாகவே எழுதுகின்றேன்
இதை எல்லாரும் படித்து பாராட்டுவதை விட என் நண்பன் படித்தால் போதும் எனக்கு
நண்பா உன்னை பிரியும் சந்தர்பத்தை விட
என் உயிர் பிரியும் சந்தர்பத்தை எனக்கு தா
....அக்பர்
என்னடா எவன பாத்தாலும் நட்பு நட்புன்க்ரானுங்க என்ன பெரிய நட்புன்னு கேக்காதிங்க என் நட்பு எனக்கு பெரியதுதான்
என் நன்பன உங்களுக்கு அறிமுகம் செய்ய போறேன்
அவன் ரொம்ம்ப்ப நல்லவன் அவன் வாழ்க்கைய விட என் வாழ்க்கைமேல அக்கறை வச்சு இருக்கான் எங்கயோ ஒரு மூலைல
வெங்காயம் வெங்காயம்னு கூவிக்கிட்டு இருந்த என்ன இன்னக்கு நான் கூப்பிட்ட 40 பேர் வர மாதிரி வச்சு இருக்கான் இறைவா அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்த அது என் நண்பனுக்கு நண்பனா பிறக்கணும் .
அவன நினைச்சா எனக்கு
எவ்வளவு பெருமையா இருக்கு
இறைவா என் நன்பன தண்ட உனக்கு நான் எத்துனை ஜென்மம் எடுத்தாலும் நன்றி சொல்லிகிட்டே இருப்பேன்
ஒவ்வொரு மனிதனும் தாய் வயிற்றில் பிரப்பான் என்றால் நான் என்
நண்பன் கண்ணிமயில் பிறந்தேன்
நான் உன்ன நினைக்கையில் என் ம சு ரொம்ப பின்னாடி போகுது
இருந்தாலும் விவரம் தெரிங்கடுல இருந்து சொல்றேன் கண்ண மூடுறேன்
ஹ்ம்ம் அந்த வீடு இன்னும் கட்டல பாதியா நிக்குது இல்லல்ல இனிக்குது
நானும் நீயும் மணிக்கணக்கா உக்காந்து பேசுறோம் எல்லாம் கேக்குறாங்க அப்டி என்னதான் பேசுவிங்கலோன்னு. ஆனா மச்சான் நமக்கு இன்னும் பேசத்தான் எவ்வளவோ இருக்கு வேணாம் வேணாம் நான் கதையா மாத்துறேன்
எத நினைக்க
மார்கெட்டுல காய்கறி வாங்குறப்ப நீ என்ன திட்டுனதுல இருந்து நீயும் நானும் ஒவ்வரு விசயத்துக்கும் சண்டை போட்ட வரைக்கும் .
ஒரு பெண்ணை மச்சான்னு கூப்பிடுரதுல எனக்கு என்னக்கும் வெக்கம் வந்தது இல்ல
ஒரு ஆணை மச்சின்னு கூப்பிடுறதில உனக்கும் வெக்கம் வந்தது இல்ல
நாமதான் ஒருதற்கு ஒருத்தர் போட்டி போட்டு பிரியாம இருந்து இருக்கோமே
நாம ஓட்டாத ஆள் நம் வீதியில் உண்டா அதெல்லாம் நான் இப்போ நினச்சாலும் அம்மம்மா என்ன சுகம்
நீயும் நானும் அண்ணனும் நம் ஸ்ரீரங்கம் அடயவளைங்கான் வீதியில் கையில் எடாவடு தீனி வாங்கி வச்சுக்கிட்டு என்னென்னமோ பேசிகிட்டு நடந்த அந்த காலம் இனி வரேவே வராதாடா ?
நீ என் வாழ்கையை பத்தி கவலைபட்டது என்ன எப்படியாவது நல்ல நிலைமையில் கொண்டு வந்துரணும்னு
பட்ட கஷ்ட்டம் அப்பப்பா என் வேதன என்ன பெத்த தாய்க்கு கூட தெரியாதப்ப
உனுக்கு மட்டும் எப்படித்தான் தெரயுமோ அல்லாக்கு தான் தெரியும்
ஆனா மச்சான் இங்க நான் எவ்வளவோ வகையான சாப்பாடெல்லாம் சாப்பிட்டுட்டேன் ஆனால் என் பசி அறிந்து வீட்டுல இருக்குற பழைய சோர
கொஞ்சமா தயிர் ஊத்தி
உன்கையலையே குடுப்பியே அந்த ருசி உலகத்துல எங்க போனாலும்
கிடைக்காது கிடைக்காது கிடைக்காது
இனி கிடைக்குமான்னு நினைக்கிறப்ப கண்ணுல தண்ணிய தவிர என் மனச
சொல்ல எனக்கு வேற வார்த்தை கிடக்கல
ஆனா ஒன்னுடா நான் நான் எங்கல்லாம் சுத்தினாலும் அங்க நீ இருப்ப என் மச்சான் இருப்பன்ற தைய்ரியம் இருக்கும்
அந்த நினைப்புல நான் பல மாசம் கூட உன்கிட்ட போன் பன்னாம இருந்து இருக்கேன்
ஆனால் நீ இல்லாம நான் அங்க வந்து நான் எங்க போவேன் என் வீட்டுக்கு எத்தன பேர் இருந்தாலும் என் லக்ஷ்மி நீ இல்லாம
திருச்சி எனக்கு திருச்சியா இருக்காது
அதா நினைகிரப்பவே என் கண் கலங்குதே நான் உன்ன அனுப்பிட்டு என்ன செய்ய போறேன்
ஆனாலும் ஒரு சந்தோஷம் என் பிரெண்டு கேனடா போனா சந்தொசமசப் படுவானு நினைக்கிரப்ப என் துக்கம் எல்லாம் போயிருது
டேய் போதுண்டா விசயத்துக்கு வா
மச்சான் உனக்கு நல்லா ஞாபகம் இருக்கா
நம்ம சின்னம்மான்னு ஒருத்தவங்க நம்பள சொன்னங்க எப்படியாவது கல்யாணத்துக்கு பிறகு நாம்பளுக்குள்ள பிரச்னை வரும்னு
நாம அப்பா சொன்னோம் எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு நாங்க ரெண்டு பேரும் கடைசிவரை இப்படிதான் இருப்போம்னு
இறைவன் கருணையாள நம்மை கடைசிவரை ஆண்டவன் இப்படியே வச்சு இருக்கணும்
சரி சரி நான் கதையை ஆரம்பிகின்றேன்
அது ஒரு மார்கழி மாதம் காலை வானம் அழுவாத வேண்டாமா என்பது போல தன கண்ணீரை கர்பப்பையில் தளும்ப தளும்ப காத்திருந்தது .பூமி எங்கும் காலை பனி படிந்து வேண்டாம் கொட்டி விடாதே என் குழந்தைகள் துள்ளி விளையாடும் நேரம் இது என்று வானத்தை நோக்கி கை ஏந்தி கொண்டு இருந்தது .நாம் பார்க்கும் இருவரும் வானத்தை பார்க்கும் நிலையிலும் இல்லை.பூமியை பார்க்கும் நிலையிலும் இல்லை அவர்கள் இருவர் நினைவிலும் ஒருவருக்குள் ஒருவரே .இந்த உலகில் உள்ள யாரையும் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை .அன்பு ,பண்பு ,பாசம் ,நேசம் ,கொடுக்கல், வாங்கல்.போன்ற எதுவும் அவர்கள் இடையில் இல்லை .
ஆமாம் அனைத்தும் இல்லை என்றால் அவர்களை நாம் எப்படி மனிதர்கள் கணக்கில் சேர்ப்பது .ஆம் அவர்களிடம் நட்பு இருந்தது ஹா நட்பு வார்த்தையை சொல்லும்போதே அவர்கள் மனதி தான் எத்துனை சந்தோஷம் ?
நமது நினைவிலும் அது போலவே தான் தோன்றுகிறது .
முன்னூறு ரோஜாக்கள் ஒரே நேரத்தில் பூத்தது போல்
மல்லிகை தோட்டத்தில் உள்ள அத்துணை பூக்களும் ஒரே சமயத்தில் பூத்தால் கூட இவ்வவளவு மனம் வருமோ என்று தெரியாது என்ன சொல்ல நான். சரி நாம் அவர்களை தொடர்வோம் .
அந்த இருவரும் பற்றி
ஒரு ஆண் ,ஒரு பெண்
ஆண் : அஜய்
பெண்: சபீனா
இவர்களை பற்றி நாம் சொல்லவேண்டும் என்றால் நாம் காலத்தை கொஞ்சம் கட்டாயம் பின் நோக்கி திருப்பி போடா வேண்டும்
அது ஒரு கிராமம்
அப்போது மழை காலம் பூக்களுக்கும் பஞ்சமில்லை புன்னகைக்கும் பஞ்சமில்லை என்பதுபோல நம் வாண்டுகள் இருவரும் வீதி உலா வரும் அழகை பார்க்க கதிரவன் கூட காத்திருப்பன் அந்த வீதியில்.ஊர் அனைத்தும் சொந்தங்களை இவர்கள் இருவரையும் தன பிள்ளைகளாய் பாவிக்கும் .தனக்கு மூன்று பிள்ளைகள் இருந்தாலும் இந்த இருவரும் வீதியில் நடந்தால் கொண்டாட்டமே.
இவ்வளவு காலையில் இவர் இருவரும் எங்கே செல்கின்றனர்